×

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்க கோரிய மனுவை நீதிபதி ஏற்க மறுப்பு

சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரத்தை தமிழில் மொழிபெயர்க்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் மனு

தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழா பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த  விழாவிற்கான பூஜைகள் ஜனவரி 27ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த குடமுழுக்கு விழாவின் போது, உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் உச்சரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், மந்திரங்களை தமிழில் சொல்லும் போது தான் அதன் அர்த்தங்களை பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால், குடமுழுக்கு விழாவில் உச்சரிக்கும் மந்திரங்களை தமிழில் மொழி பெயர்த்து தெரிவிக்கும்படி  அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி  திருவள்ளூரை சேர்ந்த மணிகாணந்தா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை ஏற்க நீதிபதி மறுப்பு


இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குடமுழுக்கு விழாவின் போது தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதே போல இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தள்ளதாகவும், எனவே இந்த வழக்கை ஏற்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு உள்ளதா எனவும்,  எந்த அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது எனவும் மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி,  இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார்.மேலும், மனுதாரர் இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறியதால், இந்த வழக்கை பொது நல வழக்குகளை விசாரிக்கும் அமர்வில்  பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

Tags : Judge ,Tanjay , Tanjore Big Temple, Judge, Denial, Sanskrit, Mantras, High Court, Tamil, Kudumbamukku
× RELATED கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக...